திருக்குறள்

518.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.

திருக்குறள் 518

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.

பொருள்:

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.

மு.வரததாசனார் உரை:

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.